இந்தியா செய்தி

10 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த 48 மணி நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் 10 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூரின் சாகி சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று சிங்கப்பூர் விமானப்படையின் போர் விமானங்களின் பாதுகாப்பின் கீழ் விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட ஓடுபாதையில் தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூருக்கு அயோத்தி வழியாக செல்லும் விமானம், பாக்தாக்ராவிலிருந்து பெங்களூர் செல்லும் விமானம், டெல்லியில் இருந்து சிகாகோ செல்லும் விமானம், சவுதி அரேபியாவில் இருந்து லக்னோ, அமிர்தசரஸில் இருந்து டேராடூன் செல்லும் விமானம், மதுரையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம். சமூக வலைதளங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்கள் அனைத்தும் விமான நிலையங்களில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அதில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் அகற்றப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் வெடிபொருட்கள் அல்லது வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(Visited 33 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!