இலங்கை

கடகுல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்

கால்வாய் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நபரின் சடலம் தலத்துஓயா, கடகுல பகுதியில் நேற்று (15) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் வயது சுமார் 27 வயதுடையவர் என தலத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி மாலை வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீடு திரும்பாத நிலையில் 13 ஆம் திகதி உயிரிழந்தவரின் தாயார் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி தலத்துஓயா மாரஸ்சன வீதியில் உள்ள கால்வாய்க்கு அருகில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!