பாட்னாவில் காரில் இருந்து மீட்கப்பட்ட இரு குழந்தைகளின் சடலம்

பாட்னாவில் ஒரு காரில் ஐந்து முதல் 10 வயது வரையிலான ஒரு சிறுவனின் உடலும் அவனது சகோதரியும் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சையின் போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாட்னாவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்முகமது ஹபிபுல்லா, குழந்தைகள் வசிக்கும் இடத்திற்கு அருகில் கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், ஒரு குழந்தையின் உடலில் தீக்காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“குழந்தைகளில் ஒருவர் இறந்துவிட்டார். மற்றொரு குழந்தை உயிருடன் இருந்தது, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, ஆனால் அங்கேயே இறந்துவிட்டது” என்று ஹபிபுல்லா குறிப்பிட்டுளளார்.
இறப்புக்கான காரணம் குறித்து தெளிவு இல்லை என்றும், பிரேத பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.