இந்தியா

பழங்குடி இன இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்! காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பாரதிய ஜனதா கட்சி மீது காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக ஆட்சியில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும், “மனிதாபிமானமற்ற” குற்றம், “பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் உண்மையான தன்மையை” காட்டுகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்
.

“பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் ஒருவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அவமானமடைந்துள்ளது.

பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜகவின் வெறுப்பின் கேவலமான முகமும் உண்மையான குணமும் இதுதான்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே