வட அமெரிக்கா

அடுத்த நிதியாண்டில் அமெரிக்காவுக்குள் 125,000 அகதிகளை அனுமதிக்க பைடன் திட்டம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த ஆண்டு தமது நாட்டிற்குள் 125,000 அகதிகளை அனுமதிக்க இலக்கு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (செப்டம்பர் 30), அமெரிக்க உள்துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அகதிகள் குறித்த தகவல் இடம்பெற்றதாகத் தெரிகிறது.

இந்த நிதியாண்டில் மட்டும் அமெரிக்க அகதிகள் அனுமதி திட்டத்தின் மூலம் 100,000 பேரை நாட்டிற்குள் கொண்டுவர பைடன் நிர்வாகம் வேலை செய்தது.

இந்த நிதியாண்டு செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

அதிபர் பைடன் திட்டமிட்டது போல் 100,000க்கும் அதிகமான அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டால் 30 ஆண்டுகளில் பதிவான அதிக எண்ணிக்கை இதுவாகும்.

125,000 அகதிகள் என்பது மனிதாபிமான அக்கறைகளால் நியாயப்படுத்தப்பட்ட எண்ணிக்கை, மேலும் அதில் தேசிய நலனும் உள்ளது என்று பைடனின் சுற்றறிக்கையில் இருந்ததாகக் கூறப்பட்டது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!