இந்தியா

மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் முடிவுகள்! திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட (உள்ளுராட்ச்சி) பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற அமைப்பு தேர்தல்களின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.

மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் 73,887 இடங்களில் 2.06 லட்சம் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர்.

பஞ்சாயத்து தேர்தல் முடிவுகலின் படி திரிணாமுல் காங்கிரஸ் 14,000 கிராம பஞ்சாயத்து இடங்களை வென்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
அதன்படி

TMC – 14,767

BJP – 3,344

CPI(M) – 1,086

Congress – 783

Independent – 854 என கிராம பஞ்சாயத்து இடங்களை வென்றுள்ளனர்.

எனினும், பல பகுதிகளில் வாக்கு மையம் சூறையாடப்பட்டும், வாக்கு பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தின.

பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. வாக்கு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.

இந்த தேர்தலில், 37 பேர் உயிரிழந்துள்ளனர், சனிக்கிழமை வாக்குப்பதிவு நாளில் 18 பேர் கொல்லப்பட்டனர் எனப்து குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content