ஐரோப்பா

ஐரோப்பாவில் கொவிட் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள நன்மை!

கொவிட் தடுப்பூசிகளால் ஐரோப்பாவில் 1.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் 53 நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 277.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 வழக்குகளும், 22 மில்லியன் இறப்புகளும் இதுவரை பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் 1.4 மில்லியன் மக்கள் குறிப்பாக வயதானவர்கள் பலர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதாகவும், தடுப்பூசியை போடும் முடிவை எடுத்தமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், WHO ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முதல் பூஸ்டர் டோஸ் மட்டும் 700,000 உயிர்களைக் காப்பாற்றியதாக தெரிவித்த அவர், குளிர்காலத்தில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்