இலங்கை

மட்டக்களப்பு- பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்து விற்பனை: நீதிமன்றம் பிரயோகித்த உத்தரவு

மட்டக்களப்பு நகரில், விற்பனை செய்யப்பட்டு வந்த பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்ட பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதார்த்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர், விற்பனை முகவர் உட்பட இருவரை 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் குறித்த பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை(23) உத்தரவிட்டார்.

அரசடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுவந்த மிகஸ் புரூட், மாம்பழம், வகைகளை கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை வாங்கி குடித்த பொதுமக்கள் பலர் குறித்த பழச்சாற்றின் சுவையில் அதிகளவு கச்சல் தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தனா.

இனையடுத்து குறித்த ஹோட்டலை கடந்த ஒக்டோபர் மாதம் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 200 மில்லி லீற்றர் பழச்சாற்று போத்தல்களை கைப்பற்றி அந்த கடை உரிமையாளர், விற்பனை முகவர், உற்பத்தி கம்பனி உரிமையாளர் உட்பட 3 பேருக்கு எதிராக மட்டு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததுடன் கைப்பற்றப்பட்ட பழச்சாறு போத்தல்களின் மாதிரிகளை கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து மிஸ்புரூட், மாம்பழம், பழச்சாற்றுக்களை இரசாயன பகுப்பாய்வினர் பரிசோதித்தன் பிரகாரம் அதில் பென்சோயிக் அமிலம், சல்ஃபர்டை, ஆக்சைடாக சல்பைட், பென்சோயிக் அமிலம் ஆகிய கலவைககளின் உள்ளடக்கம்; அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உதந்தது அல்ல என இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்கின்; 2,ம் 3ம் எதிரிகளான கம்பனி முகவர் கம்பனி உரிமையாளர் இருவருக்கும் தலா ஒரு இலச்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் இருவரையும் 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் குறித்த நாமம் கொண்ட பழச்சாற்று போத்தல்களை விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து உடனடியாக கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார்

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content