1,200 டன் ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் வங்கதேசம்

துர்கா பூஜைக்கு முன்னதாக, வங்காளதேசம் 1,200 டன் ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
“நடப்பு 2025 ஆம் ஆண்டு துர்கா பூஜையை முன்னிட்டு 1,200 மெட்ரிக் டன் ஹில்சா மீன்களை நிபந்தனையுடன் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது” என்று வங்காளதேச வர்த்தக அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட வர்த்தக உரிமம், ERC, வருமான வரிச் சான்றிதழ், VAT சான்றிதழ், விற்பனை ஒப்பந்தம் மற்றும் மீன்வளத் துறையின் உரிமம் உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களுடன் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“ஒரு கிலோவிற்கு ஹில்சாவின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அமெரிக்க டாலர் 12.50 என அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு விண்ணப்பித்தவர்கள் புதிய விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.