இந்தியா செய்தி

இந்தியர்களுக்கான தூதரக சேவையை இடைநிறுத்தியது பங்களாதேஷ்: டெல்லியில் 25 பேர் கைது!

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகின்றது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கிடையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே டெல்லி , கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் பங்களாதேஷ் தூதரகங்கள் ஊடாக வழங்கப்படும் சுற்றுலா உள்ளிட்ட விசாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்கள் வழங்கப்படுகின்றன.

அதேவேளை, டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 25 பங்களாதேஷ் பிரஜைகள் மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!