உலகம் செய்தி விளையாட்டு

வங்கதேசத்தில் ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப தடை

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடரை ஒளிபரப்ப வங்கதேச(Bangladesh ) இடைக்கால அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது அண்டை நாடான இந்தியாவுடனான வளர்ந்து வரும் சர்ச்சையின் சமீபத்திய நடவடிக்கை ஆகும்.

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI) எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முஸ்தாபிசுர் போன்ற நட்சத்திர வீரர் தொடரில் இருந்து முறையற்ற முறையில் நீக்கப்பட்டது நியாயமற்றது என்று நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

டி20 உலகக் கோப்பை – வங்கதேச அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!