இலங்கை செய்தி

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக கருதி பிரித்தானியா விதித்துள்ள தடையை நீக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அகிம்சை வழிகளில் தனது அரசியல் மற்றும் சித்தாந்த இலக்குகளை அடைய முயல்வதால், இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

எனினும், ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட கேரிக்கை மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு ஆணைக்குழு, வெளிப்படையான தீர்மானத்தை வழங்கி இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.

(Visited 1 times, 1 visits today)
See also  பாகிஸ்தான் அணித்தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content