இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் தடை நீக்கம் – முதலாவது தொகுதி வாகனங்கள் இறக்குமதி!

இலங்கையில் வாகன இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் அதற்கான தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலாவது தொகுதி வாகனங்கள் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொயோட்டா லங்கா நிறுவனம் குறித்த வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த வானங்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த நிறுவனம், 26 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதுடன், அதில் பேருந்துகள் மற்றும் வேன் என்பன அடங்குகின்றன.

இதற்கிடையில், சாரதி உட்பட 10 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் கார்கள், முக்கிய பிரமுகர்கள் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விசேட நோக்க வாகனங்கள் என்ற பிரிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வாகன இறக்குமதியின் போது அரசாங்கத்திற்கு தமது சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்