உலகம் செய்தி

நியூ ஜெர்சியில் (New Jersey) அமுலுக்கு வரும் தடை – மீறினால் சட்டநவடிக்கை!

நியூ ஜெர்சியில் (New Jersey) உணவகங்கள் மற்றும் பாடசாலைகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பொருட்களை  தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

தொடர்புடைய சட்டமூலம்  டேக்அவே ஆர்டர்களுக்கும்  (takeaway orders) பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்  பாடசாலைகள் மற்றும், சுகாதார நிலையங்களுக்கு மாத்திரம் சில ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சட்டத்திற்கு இணங்காத உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இரண்டாவது முறை இதே தவறை செய்யும் பொழுது  தண்டப்பணமாக $1,000 டொலரும்,   விதி மீறலுக்காக கூடுதலாக $2,500 டொலரும் அபராதமாக  விதிக்கப்படும்.

வசூலிக்கப்படும் அபராதங்களில் ஒரு பகுதி நியூ ஜெர்சி தூய்மை சமூகங்கள் திட்ட நிதிக்கு அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த கவலைகள் காரணமாக சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் சில குடியிருப்பாளர்கள் இதை ஆதரிப்பதால், இந்த திட்டம் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!