இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கன்னாலியா மற்றும் சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பார்வையிடும் போது கூடுமானவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அருவிகளை சுற்றியுள்ள மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் குறுகிய காலத்தில் பெய்த கனமழையால் அருவிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து உடனடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, குளிக்கும் போதும், இறங்கும் போதும், அருவிகளுடன் இணைந்திருக்கும் போதும் கூடுமானவரை கவனமாக இருப்பது மிகவும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீரின் ஓட்டத்தில் உடனடி மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கண்ணாலிய மற்றும் சிங்கராஜ வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!