ஐரோப்பா

சுவிஸில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வெளியாகியுள்ள மோசமான செய்தி

சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் கவலையை அதிகரிக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.

பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள்.ஜூன் மாதம், பெடரல் வீட்டு வசதி அலுவலகம் இந்த வட்டி வீதத்தை 1.25 சதவிகிதத்திலிருந்து 1.5 சதவிகிதமாக உயர்த்தியது.

தற்போது, அந்த வட்டி வீதம் மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி வீதத்தை 1.5 சதவிகிதத்திலிருந்து 1.75 சதவிகிதமாக சுவிஸ் தேசிய வங்கி உயர்த்தியுள்ளது. விடயம் என்னவென்றால், இந்த மாற்றம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.வட்டி வீதம் 1.5 சதவிகிதமாக உயர்ந்தாலே, வீட்டு வாடகைகள் சுமார் 3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என முன்னர் கூறப்பட்டது. இப்போது, அது 1.75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாடகை மேலும் அதிகரிக்க உள்ளது.

Lanka, too, victim of aggressive interest rate hikes in US – The Island

ஆனால், வாடகை எவ்வளவு உயர உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைவிட தற்போது வாடகை மேலும் அதிகரிக்க உள்ளது, வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மற்றொரு பெரிய அடியாக கருதப்படுகிறது. ஒரே ஆறுதலான விடயம் என்னவென்றால், பொதுவாக, சுவிட்சர்லாந்தில் வீட்டு வாடகை உயர்வு அக்டோபர் மாதத்தில்தான் அமுலுக்கு வரும் என்பதால், வரும் அக்டோபரில்தான் வீட்டு வாடகைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

மேலும், வாடகை உயர்வு குறித்து, வீட்டு உரிமையாளர்கள், மூன்று மாதங்களுக்கு முன்பே வாடகைக்கு இருப்போருக்கு தெரிவிக்கவேண்டும் என்பதாலும், வீட்டு உரிமையாளர்கள், அக்டோபரில்தான் வீட்டு வாடகைகளை அதிகரிக்க முடியும். இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வீட்டு உரிமையாளர்களுக்கும் ஒரு மோசமான செய்தி உள்ளது. அதாவது, கடன் வாங்கி வீட்டைக் கட்டியுள்ள வீட்டு உரிமையாளர்களின் வீட்டுக் கடனுக்கான வட்டியும் அதிகரிக்க உள்ளது என்பதுதான் அது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content