ஆசியா

ஆப்கானிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு முதுகில் அறுவை சிகிச்சை!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானுக்கு நேற்று முதுகில் அறுவை சிகிச்சை மோற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி மொத்தம் 9 லீக் போட்டிகள் விளையாடியது. இதில், 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளை பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தில் இருந்தது.

இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனிடையே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறாத ஆப்கானிஸ்தான் அணி லீக் போட்டிகளை முடித்துகொண்டு தாய் நாடு கிளம்பியது.

Image

இதனிடையே, ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ரஷீத் கானுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் ஓய்வு எடுத்து வந்தார். இச்சூழலில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தினர்.இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் லீக் தொடரான பிபிஎல் போட்டியிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது.

இந்நிலையில்தான் ரஷீத் கானுக்கு இன்று முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அவர் அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (நவம்பர் 23) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அறுவை சிகிச்சை நன்றாக முடிந்தது. இப்போது குணமடையும் சூழலில் இருக்கிறேன். மீண்டும் களத்தில் இறங்க என்னால் காத்திருக்க முடியாது”என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!