அஜர்பைஜான் விமான விபத்து – ரஷ்யா விடுத்த எச்சரிக்கை

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்து குறித்து ரஷ்யாவை சந்தேகிக்கும் ஊகங்களைப் பரப்பவேண்டாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் நேற்று முன்தினம் கஸக்ஸ்தானில் (Kazakhstan) விபத்துக்குள்ளானது.
அதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கு ரஷ்யாவே காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை முடிவதற்குள் எவ்வகையிலும் ஊகங்களை வெளியிடுவது தவறு என்று கிரெம்ளின் (Kremlin) மாளிகைப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov) கூறினார். விசாரணை நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்து அஸர்பைஜான் மக்களுக்குப் மாபெரும் துயரம் என்று அந்நாட்டு ஜனாதிபதி இல்ஹம் அலியெவ் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)