ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவும் நோய் தொற்று – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியா – நியூ சவுத் வேல்ஸில் சிறுவர்களிடையே நிமோனியா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் நிமோனியா நோயுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நான்கு வயது மற்றும் அதற்கும் குறைவான சிறுவர்களின் எண்ணிக்கை 124 என சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நிமோனியா அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வரும் பாடசாலை வயது குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

ஐந்து முதல் 16 வயதுக்குட்பட்ட 317 குழந்தைகள் கடந்த வாரத்தில் நிமோனியாவால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் மத்தியிலும் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 127 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மீட் குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் பிரிட்டன் கூறுகையில், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பதிவான எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது.

சிறுவர்களின் உடலில் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாத புதிய வகை பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!