ஆசியா

பாலி தீவில் உள்ள ஒரு வில்லாவில் ஆஸ்திரேலிய நபர் ஓருவர் சுட்டு கொலை

இந்தோனீசியாவின் பாலித் தீவில் ஆஸ்திரேலிய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.மற்றோர் ஆஸ்திரேலிய நபரும் சுடப்பட்டுக் காயமடைந்தார். இச்சம்பவம் சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை நிகழ்ந்ததாகக் காவல்துறை, ஊடகங்களிடம் தெரிவித்தது.

துப்பாக்கிக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக நம்பப்படும் இருவரை பாலிக் காவல்துறை தேடி வருகிறது. துப்பாக்கிச்சூடு பாலியின் பண்டுங் வட்டாரத்தில் உள்ள பங்களா ஒன்றில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது என்று காவல்துறைப் பேச்சாளர் அரியசாண்டி குறிப்பிட்டார்.

துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானவர்கள் ஸிவன் ஆர், 32, என்றும் சனார் ஜி, 35, என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸிவன் ஆர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மோசமான காயங்களுக்கு ஆளான சனார் ஜி, மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து இருவர் மோட்டார்சைக்கிள்களில் தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் விவரித்தனர் என்று அரியசாண்டி குறிப்பிட்டார். தப்பியோடியதாக நம்பப்படும் இருவரும் ஆஸ்திரேலிய பாணியில் ஆங்கிலம் பேசியதுபோல் கேட்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!