அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு!

பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவர் பிரதமர் கலாநிதி ஹரினி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை பாதித்த திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக ஆஸ்திரேலியா வழங்கிய உதவிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் நன்கொடையாக 3.5 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தமது ஆதரவை ஆஸ்திரேலியா தொடர்ந்தும் வழங்கும் என ஆஸ்திரேலிய பிரதிநதிகள் உறுதியளித்தனர்.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!