செய்தி விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட்டானது.

தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட்டானது.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 19 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது .

60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில் உள்ளது.

59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 50.00 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி