இலங்கை

நிவாரணம் பெற காத்திருப்போரின் கவனத்திற்கு…..!

புயல் நிவாரணம் வழங்குவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்குவதாக கூறி வரும் நபர்களிடம் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம் என பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரி, வாட்ஸ்அப், முகப்புத்தகம் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் வழியாக ஏராளமான குறுஞ்செய்திகளைப் பரப்புவது சமீபகாலமாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பேரிடருக்குப் பிந்தைய நிவாரணத்திற்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பது மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இடம்பெறுவதாகவும்,  அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என்று அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!