பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திற்கு அருகே கொலை முயற்சி : பொலிஸார் குவிப்பு!

மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் முகாமிட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கத்திக்குத்து தனிப்பட்ட விரோதம் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத நோக்கம் இல்லை என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 24 times, 1 visits today)