மத்திய கிழக்கு

ட்ரோன் மூலம் படுகொலை முயற்சி ; ஹிஸ்புல்லா மீது பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, சனிக்கிழமை (அக்டோபர் 19) தம்மைக் கொல்ல முற்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பைக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

லெபனானிலிருந்து பாய்ச்சப்பட்ட ட்டரோன் ஒன்று அவரின் வீட்டைத் தாக்கியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததைத் தொடர்ந்து நெட்டன்யாகு இதனைக் கூறினார்.

ட்ரோன் தாக்குதலை ஹிஸ்புல்லா இதுவரை பொறுப்போற்கவில்லை. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் உள்ளிட்டவர்களை இஸ்ரேல் கொன்றதன் எதிரொலியாக இந்த ட்ரோன் தாக்குதல் அரங்கேறியது.

நெட்டன்யாகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், “ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லா, என்னையும் என் மனைவியையும் இன்று கொல்ல முற்பட்டது கடுமையான தவறு,” எனக் கூறினார்.

இஸ்ரேலியக் குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்க முற்படும் எவரேனும் அதற்குப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்த நெட்டன்யாகு, போரின் எல்லா இலக்குகளையும் எட்டுவதில் மறுவுறுப்படுத்தினார்.

வானூர்தித் தாக்குதல் நடந்தபோது நெட்டன்யாகுவும் அவரின் மனைவியும் வீட்டில் இல்லை எனப் பிரதமர் அலுவலகம் முன்னதாகக் கூறியிருந்தது. இஸ்ரேலின் சிசேரியா நகரில் நெட்டன்யாகுவின் வீட்டைக் குறிவைத்த நடத்தப்பட்ட வானூர்தித் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

லெபனானிலிருந்து பாய்ச்சப்பட்ட மூன்று ட்ரோன்களில் இரண்டு இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் பின்னர் கூறியது.

(Visited 49 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.