ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு தாக்குதல் எச்சரிக்கை – மொஜ்தபா கமெனி காயமடைந்தாரா?
ஈரானின் புதிய உச்ச தலைவராக கருதப்படும் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei) மீது தாக்குதல் இடம்பெறலாம் என இஸ்ரேல் ( Israel) எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் இடம்பெற்ற போதிலும் , மொஜ்தபா கமெனி காயமடைந்தாரா அல்லது அவரது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை வெளியாகவில்லையென கூறப்படுகிறது.
தெஹ்ரான் தனது ஆளுமையை வலுப்படுத்த முயற்சித்திருப்பதால், அரசு புதிய தகவல்களை வெளியிடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கர்கள் தங்களுக்கு ஒரு பயங்கரமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்என்ற கவலை வளைகுடா நாடுகளிடையே அதிகரித்து வருகிறது.





