ஆப்பிரிக்கா

நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து தாக்குதல் : படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்கள்!

வடமேற்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நைஜீரிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் எட்வர்ட் புபா, சொகோடோ மாநிலத்தின் சிலமே பகுதியில் உள்ள லகுராவா கிளர்ச்சிக் குழுவின் தளவாட தளத்தை விமானப்படை குறிவைத்ததில் கிராமவாசிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் பொதுமக்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் அடிக்கடி நடக்கின்றன.

கடந்த ஆண்டு, வடமேற்கு நைஜீரியாவில் மதக் கூட்டத்தை குறிவைத்து ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 85 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!