இந்தியா

ரயிலில் பயணிகள் மீது தாக்குதல்; வைரல் வீடியோவால் டிக்கெட் பரிசோதகர் மீது அதிரடி நடவடிக்கை!

ரயிலில் டிக்கெட் இன்றி பயணித்ததாக பயணிகளை அடித்து தாக்கிய டிக்கெட் பரிசோதரின் வீடியோ வைரலானதை அடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

பரவுனி-லக்னோ விரைவு ரயில் உத்தரபிரதேசத்தின் கோண்டா மற்றும் பராபங்கி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது பிரகாஷ் என்பவர் டிக்கெட் பரிசோதராக அந்த ரயிலில் பணியில் இருந்தார். ரயிலில் பயணித்த சில இளைஞர்கள் உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை டிக்கெட் பரிசோதகர் பிரகாஷ் கடுமையாக தாக்கினார்.

இதை அந்த பெட்டியில் பயணம் செய்த சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், வீடியோவை பதிவு செய்தவரையும் பிரகாஷ் அடிப்பதற்காக கையை ஓங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

உரிய பயணச்சீட்டு இன்றி பயணித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இருப்பினும் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பிரகாஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

https://twitter.com/i/status/1747880733815791625

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!