ஐரோப்பா

பிரான்ஸில் மக்ரோனின் வேட்பாளர் மீது தாக்குதல்!

உயர்மட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பிரெஞ்சு அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிஸ்கா தெவெனோட் பிரச்சாரப் பாதையில் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மக்ரோன் தலைமையிலான மத்தியவாதக் கூட்டணியின் வேட்பாளரான தெவெனோட், அவரது துணை மற்றும் கட்சி ஆர்வலர் ஆகியோர் ஜூலை 7 ஆம்  திகதி தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு பாரிஸ் அருகே தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது ஒரு குழு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பிரதமர் கேப்ரியல் அட்டல் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

தெவெனோட் காயமடையவில்லை என்றும், தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன, ஆனால் அவரது துணை மற்றும் கட்சி ஆர்வலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்