யூதர்கள் மீதான தாக்குதல் – கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள நபர்!

நியூயார்க் நகரில் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
ஷாசெப் ஜாதூன் என்றும் அழைக்கப்படும் 20 வயதான முகமது ஷாசெப் கான், செப்டம்பரில் கனடாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் அக்டோபர் 7 ஆம் தேதி நினைவு நாளில், புரூக்ளினில் உள்ள ஒரு யூத மையத்தில் இஸ்லாமிய அரசுக்கு (IS) ஆதரவாக ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு நடத்த கான் திட்டமிட்டிருந்ததாக ஒரு குற்றவியல் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)