டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் தாக்குதல் – விமான சேவைகள் பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் சேமிப்பு மையமாக உள்ள ஃபுஜைரா (Fujairah) துறைமுகமும், டுபாய் (Dubai) சர்வதேச விமான நிலையமும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்துக்குப் பின்னர் விமான நிலையத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டதால், இன்றைய தினம் சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இதேவேளை வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு வசதிகளில் ஒன்றாக கருதப்படும் ஃபுஜைரா துறைமுகத்தின் தொழில்துறை பகுதிக்கும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது அங்கும் தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், Abu Dhabi நகரத்தின் புறநகரில் காரொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்





