இலங்கை

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் அரங்கேறிய கொடூரம் – பறிதாபமாக உயிரிழந்த மாணவன்!

புதிய மாணவர் கொடுமைப்படுத்துதல் சம்பவத்தால் மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் சபரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் ஆவார்.

ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார்.

அவர் ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவர் சந்தித்த தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, இறந்த சரித்தின் தாயார் கண்களில் கண்ணீருடன் இவ்வாறு கூறினார். “என் மகனை சித்திரவதை செய்து, அவனுடைய உள்ளாடைகளை கழற்றி, அவன் தலையை சுவரில் மோதி, விழுந்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதாக சரித்தின் தந்தை குற்றம் சாட்டினார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்