மத்திய கிழக்கு

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 81 பேர் உயிரிழப்பு; ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம்

காஸா மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குல்கள் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பேர் உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அறிவித்தது.

காஸா விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் சிறுவர்களும் அடங்குவர்.இந்தத் தகவலை அல் ஷிஃபா மருத்துவமனை ஊழியர்களும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அந்த விளையாட்டரங்கில் அகதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலில் உயிரிழந்தோரின் சடலங்கள் மண்ணில் புதையுண்டதாகவும் அவற்றை மீட்க பாலஸ்தீனர்கள் வெறும் கைகள், மண்வெட்டிகளைப் பயன்படுத்தியதையும் காணொளிகள் காட்டின.காஸாவெங்கும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 9 சிறுவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காஸாவில் உள்ள பல்வேறு இடங்களில் இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும் ஆளில்லாத வானூர்திகள் மூலம் தாக்கியதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் கூறினர்.

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஜபாலியா நகரில் உள்ள ஒரு வீடு தகர்ந்தது. அதில் இருந்த அந்த மூன்று சிறுவர்களும் உயிரிழந்தனர்.காஸாவின் தென்கிழக்குப் பகுதியில் மேலும் ஆறு சிறுவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பள்ளி ஒன்று தரைமட்டமானது.அதில் அகதிகள் சிலர் தங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அது கருத்து தெரிவித்தது.அதில் காயமடைந்தோர் தொடர்பான விவரங்கள் தனக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.ஆனால் தனது படைகளுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய சந்தேகத்துக்குரிய தனிநபர் அங்கு இருந்ததாக அது தெரிவித்தது.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
Skip to content