காசாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள் – ஐ.நா. வேதனை

இஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 40,500 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதோடு, அவர்களில் பலர் கேட்கும், பேசும், பார்க்கும் திறன்களைக் கூட இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 1.32 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக உணவுப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 63,700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,61,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புகைப்பட பத்திரிகையாளர் மோதாஜ் அஜாய்ஜியா, 2023ல் காசாவின் முக்கிய சாலையை படம் பிடித்த வீடியோவையும், அதே சாலை இப்போது முற்றிலும் இடிக்கப்பட்டு காணப்படும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.