ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படமாட்டார்கள் : புதிய திட்டத்தை அறிவித்த தொழிற்கட்சி!

பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் திட்டம் எதுவும் இருக்காது என சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைப்பதற்கான கன்சர்வேடிவ்களின் முதன்மைத் திட்டத்திலிருந்து விடுபட தொழிற்கட்சி விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“விமானங்கள் இல்லை, ருவாண்டா திட்டம் இல்லை, இது ஒரு வித்தை, இது மிகவும் விலை உயர்ந்தது, இது வேலை செய்யாது என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவற்காக சர் கெய்ர் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார்.

அதாவது புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான புலனாய்வாளர்களை கொண்ட புதிய எல்லைப் பாதுகாப்புக் கட்டளையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சர் கீர் ஸ்டார்மரின் கருத்தை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பாசாங்கு தன்மை என கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!