பூமியை தாக்கும் சிறுகோள் பற்றி அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை விடுத்த வானியற்பியல் நிபுணர்!

2032 ஆம் ஆண்டில் பூமியில் மோதக்கூடிய “மாளிகை அளவிலான சிறுகோள்” பற்றிய ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை வானியற்பியல் நிபுணர் நீல் டி கிராஸ் டைசன் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் நமது கிரகத்திற்கு அச்சுறுத்தலாக அடையாளம் காணப்பட்ட சிறுகோள் 2024 YR4, 130 முதல் 300 அடி அகலம் கொண்டது. டிசம்பர் 22, 2032 அன்று அது பூமியில் மோதுவதற்கு 2.3 சதவீத வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
விண்வெளி நிறுவனத்தின் ரேடாரில் முதன்முதலில் காணப்பட்டபோது நாசா அதற்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக வாய்ப்புகளை வழங்கியது.
இப்போது அறிவியலுக்கான செலவினங்களைக் குறைக்க ஒரு மோசமான நேரமாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
(Visited 24 times, 1 visits today)