செய்தி விளையாட்டு

AsiaCup – பாகிஸ்தானுக்கு எதிராக 133 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் சஹின் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 134 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழக்கும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!