செய்தி விளையாட்டு

AsiaCup M05 – முதல் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற 5வது போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் எடுத்தது. ஜேகர் அலி 4 ஓட்டங்களும், ஷமிம் ஹொசைன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, 140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.

கமில் மிஷாரா 46 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!