இலங்கை

நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறோம் – பந்துல!

பொது போக்குவரத்து பஸ் சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (20.07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அமைச்சர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்  பொது போக்குவரத்து பேருந்து சேவைக்காக ஈ – டிக்கெட்டிங் முறைமையை தயாரிப்பதற்கு 12 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஈ-டிக்கெட்டிங் முறைமைக்குள் கியூ. ஆர் மற்றும் காட் முறைமையையும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

டிக்கெட் வழங்காத நடத்துனர்கள் பலர் தற்பொழுது வேலை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய நிலையில் நடத்துனர் இன்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பேருந்துகளின் வருமானம் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன்  இலங்கை போக்குவரத்து சபையில் பல்வேறு ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த அவர் அதனை தடுக்கும் வகையிலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் மயப்படுத்தலோடு ஒப்பிடுகையில் நமது நாடு வெட்கப்படக் கூடிய நிலையில் காணப்படுகிறது எனவும்  ஒரே உபகரணம் 4 டிப்போக்கள் மூலம் ஒவ்வொரு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content