போர்ட் சிட்டியில் செயற்கை கடற்கரை திறப்பு :மக்கள் பார்வையிட அனுமதி!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த கடற்கரைக்கு அருகில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் கட்டப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)