டெல் அவிவிலிருந்து ஜெருசலேமுக்கு தூதரகத்தை மாற்றும் அர்ஜென்டினா

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய், தனது நாடு இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை அடுத்த ஆண்டு ஜெருசலேமுக்கு மாற்றப்படவுள்ளது என்று அறிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவின் தூதரகம் தற்போது டெல் அவிவ் அருகே உள்ள ஹெர்ஸ்லியாவில் அமைந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இஸ்ரேலுக்கு ஆதரவான மிலேய், தனது நாடு 2026 ஆம் ஆண்டில் தனது “தூதரகத்தை மேற்கு ஜெருசலேம் நகரத்திற்கு” மாற்றும் என்று “அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து தற்போது இஸ்ரேலுக்கு இரண்டாவது முறையாக அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அர்ஜென்டினா தலைவர், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று பியூனஸ் அயர்ஸ் தொடர்ந்து கோருவார் என்றும், இதில் ஹமாஸ் தலைமையிலான அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது அர்ஜென்டினா குடியுரிமை பெற்ற நான்கு பேர் அடங்குவர் என்றும் தெரிவித்தார்.