செய்தி வாழ்வியல்

அடிக்கடி கேக் சாப்பிடுபவரா நீங்கள்? அவதானம்

கேக் வகைகள் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

கேக் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் ;

அதிகமான அளவு கேக்-ஐ உணவாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடல் பருமனை ஏற்படுத்தும். சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை கேக்கில் அதிகமாக இருப்பதால் அவை ரத்தத்தில் சேரும்போது எளிதில் சர்க்கரை நோய் வர செய்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கேக்கில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு, கிருமிகளை எதிர்த்து போராடும் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அழித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது என்றும், 100 கிராம் கேக் சாப்பிட்டால் ஐந்து மணி நேரம் ரத்த வெள்ளை அணுக்களின் திறன் குறைந்து இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டறிந்துள்ளது.

கடந்த 2007இல் தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வின்படி கேக்குகளில் உள்ள கொழுப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 2008-இல் மேற்கொண்ட ஆய்வின் படி கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டால் நினைவாற்றல் குறைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே குறிப்பிட்டது போல, சமீபத்திய நாட்களில் சுவைகளை தாண்டி, கண்களை கவரும் அதிக வண்ணமயமான கேக்குகள் தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் செரிமான தொந்தரவு மற்றும் உடல் சோர்வை ஏற்படுத்துகின்றது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆகஸ்ட் மாதம் சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்ததின் படி அதில் 12 கேக் வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் கேன்சர் ஏற்படவும் வாய்ப்புள்ளது என உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது .

குறிப்பாக நம்மில் பலருக்கும் பிடித்த கேக்கான ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகளில் அதிக அளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்படுவதாகவும் இதுவே அதிக அளவு விற்பனை செய்யப்படும் கேக்குகளாகவும் கூறப்படுகிறது . அதனால் கண்களை கவரும் அதிக வண்ண மையத்துடன் இருக்கும் கேக் வகைகளை வாங்குவதை தவிர்த்து விட வேண்டும் எனவும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கின்றது. மேலும் சமீபத்தில் பெங்களூரில் கேக் சாப்பிட்ட ஐந்து வயது சிறுமி உயிரிழந்து விட்டதாக செய்திகளும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 32 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content