கத்தார் மீதான தாக்குதலை தொடர்ந்து வான்வெளியை மூடிய அரபு நாடுகள்

ஈரானில் அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் தாக்கியதை அடுத்து, “மறு அறிவிப்பு வரும் வரை” கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடுவதாகக் தெரிவித்துள்ளது.
தனது அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக, மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத்தின் மிகப்பெரிய மூலோபாய சொத்தாக இருக்கும் அல்-உதெய்த் விமான தளத்தைத் தாக்கியதாக ஈரான் உறுதிப்படுத்தியது, மேலும் அதன் பதில் அதன் வளைகுடா அண்டை நாடான கத்தாருக்கு “எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் வசதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்ரோஷமான மற்றும் ஆணவமான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சக்திவாய்ந்த ஆயுதப்படைகள் கத்தாரின் அல்-உதெய்தில் உள்ள அமெரிக்க விமான தளத்தைத் தாக்கின”.