தமிழ்நாடு

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திடீர் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர், லண்டனுக்கு சென்றிருந்த ரஹ்மான், சமீபத்தில் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் உள்ள ஒரு இசைக்கல்லூரியின் நிகழ்ச்சியுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவர் பிற மானவர்களின் இசை ஆர்வத்தையும், அவர்களின் திறமைகளையும் பாராட்டி பதிவிட்டிருந்தார்.

அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற விவரம், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால், ஏ.ஆர்.ரஹ்மானின் உடல் நிலை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் சமூக வலைதளங்களில் பதற்றத்துடன் சுற்றி கொண்டிருக்கின்றனர்.

(Visited 33 times, 33 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்