இலங்கை

ஏப்ரல் தாக்குதல் : சர்வதேச விசாரணையை நடத்த தயார்!

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 04 ஊடகம் வெளியிட்ட காணொலி தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தியுள்ளோம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (05.09) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேவைப்பட்டால், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளவும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது எனத் தெரிவித்த அவர், ஜெனிவா கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளதன் பின்னணியில் தான் இந்த காணொலி வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!