இலங்கை

புலம்பெயர் தமிழ் குழுக்களை திருப்திபடுத்தும் அநுர அரசாங்கம் – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களை திருப்திபடுத்துவதற்காக புத்தாண்டுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தமிழ் பிரிவினைவாதக் குழுக்கள் ஆதரவு வழங்கின.
மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே இத்தரப்புகளின் கோரிக்கையாக இருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

எனவே, மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நிச்சயம் நடத்தும். புத்தாண்டுக்கு முன்னர் இத்தேர்தல் நடத்தப்படலாம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!