இலங்கை செய்தி

இலங்கை கொண்டுவரப்பட்டது அனுலா ரத்நாயக்கவின் சடலம்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது சடலம் விமான சரக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கணவர், மகள், மகன் மற்றும் உறவினர்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான செனரத் யாப்பா ஆகியோர் சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் இழப்பீடுகளை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

49 வயதான அனுலா ரத்நாயக்க அந்நாட்டில் தாதியாக கடமையாற்றியதுடன் கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலிய பெண் ஒருவரின் உயிரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content