இலங்கை

ஒவ்வாமையால் ஆபத்தான நிலையில், சிகிச்சைப்பெற்றுவரும் மற்றுமொரு பெண்!

ஊசியால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றுவலி காரணமாக பேராதனை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவருக்கு Ceftriaxone என்ற ஊசி செலுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அந்த பெண் உயிரிழந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த எதிர்ப்பு ஊசி அனுலாவதி என்ற மற்றொரு பெண்ணுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த பெண் தற்போது கொடிய ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

முன்னதாக 21 வயதான யுவதியின் மரணம் குறித்து விளக்கமளித்த மருத்துவர்கள் இதுபோன்ற ஒவ்வாமை சம்பவங்கள் மிகவும் அறிதாகவே இடம்பெறும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்