ஆசியா

சர்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

சர்ச்சைக்குரிய செஃப்ட்ரியாக்ஸோன்  மருந்தை செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே கண்டி மருத்துவ அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் கடந்த 13ஆம் திகதி கண்டி பொது வைத்தியசாலையின் 31ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  குறித்த மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உபாதைகள் ஏற்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் பேராதனை வைத்தியசாலையில்இ குறித்த மருந்தை செலுத்தியதன் காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமையால் 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்திருந்தார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!