செய்தி

அமெரிக்காவில் குடியேற்ற முகவர்களால் மற்றொரு நபர் படுகொலை – வலுக்கும் எதிர்ப்பு!

மினியாபோலிஸில் (Minneapolis) அமெரிக்க குடியேற்ற முகவர்களால் நேற்று மற்றுமொரு நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்  உள்ளூர் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தூண்டியது.

முகவர்களின் பாதுகாப்பிற்காக மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட நபர் மினியாபோலிஸில் உள்ள படைவீரர் விவகார மருத்துவமனையில் பணிபுரிந்த 37 வயது செவிலியர் அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகர்களை சுற்றிவளைத்ததாகவும், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

கூட்டாட்சி குடியேற்ற முகவர்களால் மற்றொரு அமெரிக்க குடிமகனை சுட்டுக் கொன்றது தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துடன் மாநில அதிகாரிகள் ஏற்கனவே முரண்பட்டுள்ள நிலையில், மேலும் எதிர்ப்பலைகள் உருவாக வழியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!